TN TRB முதுகலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – பிப்ரவரி 12 முதல் போட்டித்தேர்வு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இத்தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
முதுநிலை ஆசிரியர் தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பள்ளிகளில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை -1 ஆகிய பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதனால் அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு கால அட்டவணையை கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதில் 2,207 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான தேர்வு பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு முதல் கட்டமாக 15ம் தேதி வரையிலான தேர்வுகளின் விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டது. அடுத்ததாக ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்குரிய தேர்வு தேதியும் வெளியிட்டது.
தகுதி அடிப்படையில் பொறியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!
இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற விரும்புவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில் 2.6 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக முறைகேடுகளை தடுக்க 200 மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. அத்துடன் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரலை காட்சி பதிவு செய்வதற்கும் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.