TN TRB 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் – சான்றிதழ் சரிபார்ப்பு பணி! அதிர்ச்சி தகவல் வெளியீடு!

0
TN TRB 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் - சான்றிதழ் சரிபார்ப்பு பணி! அதிர்ச்சி தகவல் வெளியீடு!
TN TRB 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் - சான்றிதழ் சரிபார்ப்பு பணி! அதிர்ச்சி தகவல் வெளியீடு!
TN TRB 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் – சான்றிதழ் சரிபார்ப்பு பணி! அதிர்ச்சி தகவல் வெளியீடு!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு கடந்த வருடம் நடைபெற்றது. இதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் போன்றவை மூடப்பட்டது. மேலும் அரசு போட்டித் தேர்வுகள், பள்ளி கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி பாதிப்பு எண்ணிக்கைகளை குறைத்தது. இதனையடுத்து பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதனால் மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியது. இந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு – யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்! மின்வாரியம் விளக்கம்!

கொரோனா பேரிடரால் போட்டித்தேர்வுகள் ஏதும் நடத்தப்படாததால் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 2021 ம் ஆண்டின் இறுதியில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வானது கணினி வழியாக டிசம்பர் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பிற்காக பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் தேர்ச்சி பெற்ற 2,148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!