போக்குவரத்து காவலர்களுக்கு ஓர் நற்செய்தி – காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மழையிலும் பணியில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு ரெயின் கோர்ட் மற்றும் ஷு வழங்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போக்குவரத்து காவலர்களுக்கு ரெயின் கோர்ட், ஷு :
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மழையால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பணிகளில் போக்குவரத்து காவலர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் மழையால் சேதமடைந்த சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்குவரத்து காவலர்கள் தானாக முன் வந்து சரி செய்து வருகின்றனர் .
Follow our Instagram for more Latest Updates
இதனால் மழையின் போது பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய ரூ.17 லட்சம் செலவில் தரமான ரெயின் கோர்ட் மற்றும் ஷு வழங்கப்படும் என தமிழக காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மத்திய அரசால் மாதம் 15 லட்ச வேலைவாய்ப்புகள் – அமைச்சர் பேட்டி!!
Exams Daily Mobile App Download
இதன் முதற்கட்டமாக நேற்று சுமார் 1000 போக்குவரத்து காவலர்களுக்கு தரமான ரெயின் கோர்ட் மற்றும் ஷு வழங்கப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தகுந்த நேரத்தில் ரெயின் கோட், ஷூ வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.