TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஜூலை இறுதிக்குள் தேர்வு!
தமிழகத்தில் கடந்த 2019 ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு உரிய அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இத்தேர்வு ஜூலை மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணி புரிய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு கொரோனா காரணமாக 2019 ம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. கடந்த 3 வருடங்களுக்கு பிறகு இத்தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்? வலுக்கும் கோரிக்கை!
இதனை தொடர்ந்து இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இதில் தாள்-1 இல் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் அத்துடன் தாள்-2யில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கற்பிக்க தகுதியுடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் இதன் முதல் தாள் எழுதுவதற்கு 12ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை பயின்றவராக இருக்க வேண்டும். இதன் 2 தாள் எழுத இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி அல்லது ஆசிரியர் பயிற்சியில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்
Exams Daily Mobile App Download
இதையடுத்து இத்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் மார்ச் 14 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இத்தேர்வு எப்போது நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இத்தேர்வு ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இன்னும் கடுமையாக உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.