தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இருப்பினும் தென்னை விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அதனால் தென்னை நலவாரியத்தை மீண்டும் அரசு அமைக்க வேண்டும் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அது தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
வலுக்கும் கோரிக்கை:
தென்னை விவசாயிகள் நலனுக்காக தென்னை நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் இந்தியாவில் முதல் முறையாக திமுக ஆட்சியில் தான், தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்கென தென்னை நலவாரியம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
அந்த காலகட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலிற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை அரசு வழங்கியது . இருப்பினும் தற்போது ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தென்னை விவசாயிகள் நலன் கருதி, மீண்டும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தற்போது தேங்காய் விலை குறைவு, தென்னை மஞ்சி தொழிற்சாலையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. ஆகையால் அரசு தென்னை நலவாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும்.
அதே போல் காங்கேயம் பகுதி தென்னை வர்த்தகத்தில் மிகப்பெரிய நகரமாக மாறி வருகிறது. இப்பகுதியில் சிட்கோ அல்லது சிப்காட் மூலமாக காங்கேயம் பகுதியில் தென்னைக்கு நிரந்தர பொருட்காட்சி மற்றும் காட்சிப்படுத்தல் கட்டிடம் அமைக்க வேண்டும். மேலும் தேங்காயின் மூலம் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்க காங்கேயம் பகுதியில் தென்னை தொழிற்சாலை பூங்கா அமைக்க அரசு முன்வரவேண்டும். என தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம், சுல்தான்பேட்டை, பேரூா், தொண்டாமுத்தூா், மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளிலும் திருப்பூா் மாவட்டம், காங்கேயம், உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகிறாா்கள்.கோவை, திருப்பூா் மாவட்டங்களில் மட்டும் சுமாா் 2 லட்சம் ஹெக்டோ் பரப்பளவுக்கு மேலாக தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.