TN TET தேர்வு தேதியில் மாற்றம்? தமிழ்நாடு ஆசிரியர் தகுதி வாரியம் விளக்கம்!
தமிழகத்தில் TET தேர்வு குறிப்பிட்ட நாளில் நடைபெற இருந்த நிலையில் தற்போது தேர்விற்கான அதே தேதியில் வேறு ஒரு TNPSC தேர்வும் நடைபெற உள்ளது. அதற்கான முழு விளக்கத்தையும் ஆசிரியர் தகுதி வாரியம் வெளியிட்டுள்ளது.
TET தேர்வு:
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியிட்டது. அதாவது, ஆசிரியர் தகுதி தேர்விற்கான முதன்மை தேர்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டுவிட்டன.
இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்விற்கான முதன்மை தேர்விற்கான தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு ஆசிரியர் தகுதி முதன்மைத் தேர்வு தாள்1 ற்க்கான தேர்வு வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், TNPSC சார்பில் நடத்தப்படும் அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வு வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் Police அதிகாரி ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
ஏகப்பட்ட விண்ணப்பதாரர்கள் TET தேர்வு மற்றும் TNPSC தேர்வு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பித்துள்ளனர். இதனால், கட்டாயமாக ஒரு தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்படக்கூடும். இதனால், தேர்வு நடைபெறும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் trb.tn.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்