தமிழக பள்ளி ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள் – விரைந்து நிறைவேற்றப்படும்.. அமைச்சர் உறுதி!
தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு வைத்து வருகின்றனர். இது தொடர்பாக இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
ஆசிரியர்களின் கோரிக்கை:
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் அது மட்டுமல்ல பழைய ஓய்வூதிய திட்டம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் , தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
IBPS Clerk & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான அரிய வாய்ப்பு – இப்போவே முந்துங்கள்!
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர், டெட் தேர்வு மற்றும் போட்டித் தேர்வு தொடர்பாக சங்கத்தினரிடம் கலந்துரையாடியுள்ளோம். பல கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ளது. இதில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளும் உள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்களுடன் விரைந்து ஆலோசிக்க உள்ளோம். உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் தெரிவித்தார்.