தமிழக டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றம்? – உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தில் மதுபான விற்பனைக்கான டாஸ்மாக் திறப்பு நேரம் குறித்த அதிரடி கேள்வி தற்போது அரசுக்கு எழுந்துள்ளது.
டாஸ்மாக் திறப்பு:
தமிழகம் முழுவதும் மதுபான விற்பனை அரசு டாஸ்மாக்கின் கீழ் நடத்தப்படுகிறது. மதுபான விற்பனையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது குறித்து பல்வேறு எதிர்ப்புகள் இருந் போதிலும், கள்ள சாராயம் விற்பனையை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை அமல் படுத்த பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால், தமிழக அரசு இனி புதியதாக டாஸ்மாக் கடைகள் எங்கும் அமைக்கப்படாது என்றும், கடைகளுக்கான இட மாறுதல் மட்டுமே செய்யப்படும் என்றும், டாஸ்மாக் திறக்கும் நேரத்தை குறைப்பதாகவும் கூறியது. அதன்படி, காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தெரிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மது விற்பனை நேரத்தை இனி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழக அரசு மாற்றுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கான பதிலினை தமிழக அரசு விரைவில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.