தமிழகத்தில் இரவு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து? முதல்வர் ஆலோசனை! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக அமலில் உள்ள இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்து, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் நல்வாழ்வு துறை, மற்ற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
முதல்வர் தலைமையில் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் துவக்கமாக கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பு விதிமுறைகள் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற விதிமுறைகள் ஜனவரி 31 வரை அமல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உத்தரவின்படி இன்று வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவு பெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுமா? ஊரடங்குகள் நீட்டிக்கப்படுமா? அல்லது மீண்டும் முழு ஊரடங்குகள் அமலுக்கு வருமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வகையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தலாமா? என்று ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி வார இறுதி ஊரடங்கு உத்தரவு கிடையாது – உணவகங்கள், திரையரங்குகள் 50% திறனில் திறப்பு!
மேலும் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. எனவே தேர்தல் காலகட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் ஆலோசனையில் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த வகையில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் முழு ஊரடங்கு போன்றவை ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.