தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க ஆலோசனை – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும், தனியார் பள்ளிகள் கட்டண விவகாரத்தை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் மெல்ல குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மற்ற மாநிலங்களில் பள்ளிகளை திறப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து விரைவில் பள்ளிகளை திறக்க பல தரப்புகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்களுக்கு வங்கி கணக்குகளில் கட்டுப்பாடு – RBI அறிவிப்பு!
100 மாணவ, மாணவிகள் எழுதிய புத்தகம் ஒன்றை தமிழகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளை ஒட்டி வெளியிடும் விழா சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் வெளியிட்ட புத்தகத்தை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் குழந்தைகள் எழுதிய இந்த அற்புதமான புத்தகத்தை நிச்சயம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்தை அரசு கேட்க இருக்கிறது. மருத்துவ வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறோம். தொடர்ந்து தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளை விசாரித்து வருகிறோம். மேலும், புகார்கள் பெறப்பட்டால் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.