இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்களுக்கு வங்கி கணக்குகளில் கட்டுப்பாடு – RBI அறிவிப்பு!
இந்தியாவில் சிறு நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நடப்பு கணக்குகள் வைத்திருந்தால் ஜூலை 31ம் தேதிக்கு பிறகு அவை முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சிறு வணிக நிறுவனங்கள் ஒரே ஒரு நடப்பு கணக்கை மட்டுமே வைத்திருக்க வேண்டும் எனவும் RBI தெரிவித்துள்ளது.
வணிக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு:
இந்தியாவில் சுய தொழில் செய்ய விரும்புபவர்கள் குறைந்த அளவு முதலீட்டை கொண்டு சிறு வணிகங்களை தொடங்குகின்றனர். இதன் மூலம் பல மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு வணிக நிறுவனங்கள் தங்களின் வருவாய் இழந்து ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது. இதனை கருத்திற்கொண்டு ரிசர்வ் வங்கி கடன் தொகையை செலுத்த கால அவகாசம் அளித்தது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்கள் குறைப்பு? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நடப்பு கணக்குகளை வைத்திருக்க கூடாது என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ஜூலை 31ம் தேதிக்கு பிறகு சிறு வணிக நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருந்தால் அவை முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சிறு வணிக நிறுவனங்கள் வங்கி கணக்கு தொடங்கும் போது அந்த நிறுவனத்திற்கு வேறு எந்த வங்கியிலும் நடப்பு வங்கி கணக்கு இல்லை என்பதை, உறுதி செய்ய பிறகே வங்கிகள் நடப்பு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை தொடங்கி சிறு வணிக நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. எனவே தான் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.