தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம்!

0
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம்!
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம்!
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம்!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான செயல்பாடு வழிமுறைகள் தொடர்பான கூட்டம் ஆகஸ்ட் 9 அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா 2வது அலையில் இருந்து மாணவர்களை காக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது தினசரி கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன.

தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதனையடுத்து தமிழக அரசும் பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படாமல் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் உடல் நலத்திற்கு நல்லதல்ல என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அரசு பள்ளிகள் திறப்பு தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி உள்ளனர்.

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்!

மறுபுறம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகள் தொடர்பான கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறப்பு தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!