தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!
கொரோனா தொற்றால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஆகஸ்ட் 17) முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் தாக்கம் குறைந்தும் வருவதையடுத்து பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்து கடந்த சில வாரங்களாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று (ஆகஸ்ட் 16) முதல் அனைத்து மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது.
சின்னத்திரை தொகுப்பாளர் “ஆனந்த கண்ணன்” திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!
மேலும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக தொடக்கக்கல்வி முதல் நடுநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்கலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஆகஸ்ட் 17) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
அந்த வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 10 மணியளவில் துவங்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் உட்பட பல கல்வி அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு பின்பாக பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.