தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.852க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.877ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த விலையேற்றம் காரணமாகவும் மக்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
சின்னத்திரை தொகுப்பாளர் “ஆனந்த கண்ணன்” திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!
இந்நிலையில் இன்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.850-ல் இருந்து ரூ.875 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 825 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 877 ரூபாய்க்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அன்றாட தேவைகளுக்கான விலைகள் தொடர்ந்து அதிகரிப்பது காரணமாக மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். மக்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.