தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழக மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக பள்ளி, கல்லூரிகளை மீண்டும் மூட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் அச்சம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் மக்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்தும் தடைபட்டது. பின்பு கொரோனா தடுப்பூசி மற்றும் ஊரடங்குகளின் விளைவாக நோய்த்தொற்று சற்று குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இது மக்களிடையே அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு இத்தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
இந்நிலையில் ஓமைக்ரான் பரவல் அதிகமெடுத்து வருவதால் மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் டாக்டர்கள் கூறியது, கொரோனா பரவல் அதிக அளவில் இருந்த போது திமுக ஆட்சி பதவி ஏற்றவுடன் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது மற்றும் தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டு வருவதால் கொரோனா குறைந்து வருகிறது.
- பண்டிகை காலம் வருவதால் மக்கள் அதிக அளவில் பொது இடங்களில் கூடுவதை தவிர்த்தல், மற்ற விழாக்கள், இறப்புகள், ஜல்லிக்கட்டு, கோவில் போன்ற இடங்களில் கூட்டம் போடுவதை தவிர்க்க வேண்டும்
- பள்ளி, கல்லூரிகள் மூடப்பட வேண்டும்.
- அனைத்து பொது இடங்களிலும் மாஸ்க் போடுவதை கட்டாயமாக்க வேண்டும்.
- மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் , முன்கள பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
- அனைத்து மருத்துவமனைகள் மற்றும் கோவிட் சென்டர்களில் மாஸ்க் , மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை விரைவில் அதிகமாக கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பரிசீலித்து மக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுகிறோம் என்று தமிழக மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.