தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் தற்போது தைப்பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
தைப்பொங்கல் பரிசு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன் மூலமாக பொதுமக்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
நாளை (டிச.28) முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – மாநில அரசு அதிரடி உத்தரவு!
இந்த ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பை மஞ்சப்பையில் வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் தமிழகத்தில் பவானி பகுதியில் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை போன்ற 20 பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை வருகிற ஜனவரி 3-ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் என்றும் அதன் பிறகு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
இந்நிலையில் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் அர்ஜூன் சம்பத் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “தைப்பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.5000 தொகையை அரசு வழங்க வேண்டும்” என்று அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் வேகமாக பரவி வரும் ஓமைக்ரான் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.