நாளை (டிச.28) முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – மாநில அரசு அதிரடி உத்தரவு!
கர்நாடக மாநிலத்தில் அதிகரிக்கும் ஓமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
உலகம் முழுவதும் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஓமிக்ரான் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய மாநிலம் கர்நாடக வந்த இருவருக்கு முதலில் தொற்று கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதனால் மூன்றாம் அலை வர கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 108 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் பகுதி நேர ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இன்று முதல் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு – அரசு அறிவிப்பு!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் அதிகரித்து வரும் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் (டிச.28) அடுத்த 10 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 97% பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 3% பேரை தடுப்பூசி செலுத்த வைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 10ம் தேதி 60 வயதிற்கு மேற்பட்டோர்க்கு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.