தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு – கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை!
தமிழக அரசு பள்ளிகளில் நேற்றுடன் ஓய்வு பெற்ற ஆயிரம் ஆசிரியர்களை பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பணி நீட்டிப்பு:
தமிழகத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 2023 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் நேற்றுடன் பணிகாலம் முடிந்து சுமார் 1000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டு தொடங்கி சில நாட்களே ஆகும் நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் மாணவர்களின் கல்வி பாதிப்படைய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தக்காளியின் விலை மேலும் ரூ.20 அதிகரிப்பு – பொதுமக்கள் அவதி!
இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை நேற்றுடன் ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அவர்களை மறு நியமனம் செய்து உள்ளது. இதனையடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நடப்பு கல்வி அண்டு முடியும் வரை தொடர்ந்து கற்பித்தல் பணியை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்றல் கற்பித்தல் பணி எவ்வித இடையூறும் இல்லாமல் தொடரும். கல்வித்துறையில் இந்த அறிவிப்பால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.