தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் – பள்ளி கல்வி இணை இயக்குனரின் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக சமீபத்தில் புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இணை இயக்குனர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஊதியம்:
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை அரசு புகுத்தி வருகிறது அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர் மேலும் நடுநிலை மற்றும் தொடக்க கல்வி என இரு நிலைகளுக்கும் தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிர்வாக மாற்றம் காரணமாக அதிகாரிகள் தலைமை பொறுப்பு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் எதிரொளியாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு மாத சம்பதம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் மாதம் தோறும் 20ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஊழியர்களின் சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த மாதம் இந்த பணிகள் கிடப்பில் இருந்தது.
தமிழக பள்ளிகளில் ‘இது’ ஏன் செயல்படவில்லை? ஐகோர்ட் கல்வித்துறைக்கு அதிரடி உத்தரவு!!
Exams Daily Mobile App Download
இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதம் இன்றி ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பளத்திற்கான பட்டியலை அலுவலகத்தில் சரியான நேரத்தில் சமர்ப்பித்து ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.