தமிழக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ???

0
தமிழக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்
தமிழக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான 12-ஆம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந்தேதி முடிவடைகிறது. இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடக்கிறது.

அது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், 2-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 24-ந் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 4-ந் தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதியும் வெளியிடப்படும்.

இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும். முதல் 15 நிமிடங்கள் மாணவர்கள் கேள்வித்தாளை படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மாணவர்கள் கேள்வித்தாளை நன்றாக படித்து பார்த்து விடை எழுத வேண்டும்.

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத உள்ளனர். இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும், 11-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் எழுத உள்ளனர். மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகப்படுத்தபட்டு 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!