தமிழகத்தில் மாதம் 30 நாட்களும் ரேஷன் கடைகள் இயக்கம் – ஊழியர்கள் அதிருப்தி!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இனி மாதத்தின் 30 நாட்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் பணி செய்ய வேண்டுமா? என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடைகள்:
ஒரு மாதத்தில் இனி 30 நாட்களும் ரேஷன் கடைகள் இயங்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். அதனால் வாரத்தின் அனைத்து நாட்களும் இனி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகள் மாதம் முழுவதும் செயல்பட்டால் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என ரேஷன் கடை ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விடுமுறை இல்லாமல் பணி மேற்கொண்டால் பணிச்சுமை அதிகமாகும் என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சானுவுக்கு காவல்துறை எஸ்.பி பொறுப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இதனிடையே தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் இலவச மளிகை பொருட்களை விநியோகம் செய்து வந்ததால், ரேஷன் கடை ஊழியர்களுக்கான வழக்கமான விடுப்பு தடைபட்டது. இந்நிலையில் மாதத்தின் அனைத்து நாட்களும் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முழுமையான ரேஷன் பொருட்கள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யும் பணிகள் மற்றும் புதிய ஊழியர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி அலுவலர்கள் உட்பட அனைவருக்கும் வாரந்தோறும் விடுமுறை அளிக்கப்படுகிற போது, ரேஷன் கடை ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.