ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – டிச.10 குறைதீர்ப்பு முகாம்!
தமிழகத்தில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது இந்த நிலையில் ரேஷன் கார்டில் தேவையான மாற்றங்களை செய்யவும், குறைகளை தெரிவிக்கவும் ஏதுவாக குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
குறைதீர்ப்பு முகாம்:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் குறைந்த விலையில் பொருள்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, தற்போது வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரேஷன் கடைகள் வாயிலாகவே மக்களை வந்தடைகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறை தீர்ப்பு முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி டிசம்பர் மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் வரும் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டலங்களிலும் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதில் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது தொடர்பாக தங்களது புகார்களை ரேஷன் அட்டைதாரர்கள் தெரிவிக்கலாம்.
Exams Daily Mobile App Download
இந்த புகாரின் பேரில் அரசு குறைகள் களைய உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். அதனைத் தொடர்ந்து இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். அதனால் இந்த முகாமில் பங்கேற்று ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கார்டில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.