தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு பொங்கலுக்கு முன்பே பரிசுத்தொகுப்பு கிடைத்திட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஓபிஎஸ் அறிக்கை:
தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம், ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி , கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு , ரவை, கோதுமை மாவு, உப்பு, முழு கரும்பு, துணி பை ஒன்று ஆகிய 21 மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பரிசு பொருட்கள் ஜனவரி 4ம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து வகை அரசு பணிகளுக்கும் இனி TNPSC மூலம் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று பரவலால் ரேஷன் கடைகளில் கூட்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரு நாளைக்கு 150 முதல் 200 நபர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் வகையில் அரசு திட்டமிட்டு செயல்பட்டு வழங்கி வருகிறது. தற்போது இப்பரிசு பொருட்கள் அனைத்தும் பொங்கலுக்கு முன்பே மக்களுக்கு கிடைத்திட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக கூட்டுறவுத்துறை உறுப்பினர்கள் பதவிக்காலம் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருக்கிறது. அனைவர்க்கும் 21 பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் கூறினார். சில பகுதிகளில் துணி பை கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் வலைத்தளங்களில் பொதுமக்கள் குறை கூறும் காட்சிகள் வெளியாகிய வைரலாகி வருவதாக தெரிவித்தார். எனவே தமிழக அரசு பொங்கல் பரிசு தொப்புப்பினை சரிபார்த்து பொங்கல் பண்டிகைக்கு முன்பு மக்களிடம் பொருட்கள் போய் சேருமாறு திட்டமிட்டு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.