தமிழக கூட்டுறவுத்துறை உறுப்பினர்கள் பதவிக்காலம் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய சட்ட திருத்தத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை:
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏழை எளிய மக்கள் குறைந்த வட்டியில் தேவைகேற்ப நகை மற்றும் பயிர்க்கடன்களை பெறுகின்றனர். இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி விவரங்கள் சேகரிக்கப்பட்டு நகைக்கடன் பெற தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பொங்கலுக்கு முன்பு அடகு வைத்தவர்களின் நகைகள் கைகளில் கிடைக்கும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையில் நிபந்தனைகள் இன்றி அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்யப்படும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஜன.9ம் தேதி முழு ஊரடங்கு, கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது. முதல் முறையாக சட்ட கூட்டத்தொடர் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நடைமுறைக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக எல்லா உறுப்பினர்களுக்கும் இன முறை விவாதிக்க வாய்ப்பளிக்கவில்லை. மேலும் 3 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து துறை அமைச்சர்களும் தங்களின் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் 110வது விதியின் கீழ் ஐ.பெரியசாமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த புதிய சட்டத் திருத்தத்தில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளதால் இந்த புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைகிறது.