தமிழக ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நவ.1 முதல் 3 வரை – சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளுக்கு சிறப்பு அத்தியாவசியப் பொருட்களை நவம்பர் 1 முதல் 3ம் தேதிக்குள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீபாவளி சிறப்பு திட்டம்:
தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களையும் அளித்து வருகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான சமையல் பொருட்கள், இலவச வேட்டி மற்றும் சேலை ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசாக ரொக்க பணமும் வழங்கி வருகிறது. இதனால் அனைத்து மக்களும் பலனடைந்து வருகின்றனர்.
அக்.29 முதல் நவம்பர் 7 வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கடந்த மே மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த சூழலில் கொரோனா நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 ம் தேதி முதல் 3ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
இது தொடர்பாக கடந்த அக்டோபர் 11ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நவம்பர் 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.