அக்.29 முதல் நவம்பர் 7 வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 7 வரை பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகை விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
இந்தியாவில் பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் அதிக கவனம் தேவை, தேவைப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு பண்டிகை தின விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 7 வரை இடைநிலை விடுமுறைக்கு பள்ளிகள் மூடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா தெரிவித்து உள்ளார். இதற்கான முறையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
ஏற்கனவே வெளியான அறிக்கைகளின் படி, கொரோனா காரணமாக இழந்த கற்பித்தல் நேரத்தை ஈடுசெய்ய, அரசிதழ் தவிர அனைத்து விடுமுறை நாட்களையும் ராஜஸ்தான் அரசு ரத்து செய்தது. ராஜஸ்தானில் அனைத்து கல்வி கூட்டங்களும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பின்னரே நடத்தப்படும். COVID-19 நெறிமுறையைப் பின்பற்றுவது அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாகும். ராஜஸ்தானின் கல்வித் துறையின் படி, பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அக்டோபர் 16 முதல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் மாநில வாரியாக பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா 3வது அலை 18 வயதிற்கு உட்பட்டவர்களை அதிகளவு தாக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ள நிலையில் கல்வி நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.