தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 500+ காலிப்பணியிடங்கள்!!
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது நடைபெற உள்ளது. தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக விண்ணப்பித்து முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு முகாம்:
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திறன் பயிற்சி மற்றும் ஆள் சேர்ப்பு முகாம் நடத்த உள்ளது. அதில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. எனவே ,வேலை தேடும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்:
காலியிடங்கள் :
20க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 500+ மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி:
10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ ITI/ டிப்ளமோ தேர்ச்சி முதல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் முறையாக கலந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
முகாம் விவரங்கள்:
இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 25.09.2021 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை திருவண்ணாமலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
Hi