தமிழகத்தில் திங்கட்கிழமை (அக்.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (அக்.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரங்களை இப்பதிவில் காணலாம்.
மின்தடை பகுதிகள்:
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் அதிகளவு மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் மின் விநியோகம் சீராக இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்து உள்ளார். கடந்த ஆட்சியில் நடைபெறாத மின் பராமரிப்பு பணிகள் தற்போது பகுதி வாரியாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின் நுகர்வோருக்கு பாதுகாப்பான, தடையில்லா மின்சாரம் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. மேலும் விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையும் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த முல்லை இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தற்போது நாளை (அக்.24ம் தேதி) மதுரை மாவட்டத்தில் மின்தடை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மதுரை கிழக்கு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தனியாமங்கலம் துணைமின் நிலையத்தில் திங்கட்கிழமை (அக்.24) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
PG TRB 2207 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு – வயது வரம்பு நீட்டித்தும் புதிய சிக்கல்!
அதன்படி நாளை காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை தனியாமங்கலம், பெருமாள்பட்டி, வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, சாத்தமங்கலம், கீழவளவு, கீழையூர், சருகுவலையப்பட்டி, தர்மசனப்பட்டி, உறங்கான்பட்டி, இ.மலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.