தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மின்தடை இருக்கா?
தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாபடவுள்ளது. இந்த நிலையில் மின்தடை செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவ்வபோது துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்படும். இத்தகைய பணிகளின் போது பாதுகாப்புக்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்படும். இது தொடர்பான அறிவிப்புகள் முன்கூட்டியே வெளியிடப்படும். இந்த நிலையில் தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஜன.15 தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பண்டிகைகள் வரவுள்ள வேளையில் மின்தடை செய்யப்படுமா? என்ற கேள்வி பயணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொங்கலையொட்டி ஜன.18 ஆம் தேதியும் விடுமுறை வழங்க திட்டம் – வலுக்கும் கோரிக்கை!!
பொதுவாக வார இறுதி நாட்களில் மின் விநியோகமானது தடை செய்யப்பட மாட்டாது. அதே போல பண்டிகை நாட்களிலும் மின் விநியோகமானது தடையில்லாமல் கிடைக்கும். அதன்படி நடப்பு மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விநியோகமானது தடை செய்ய மாட்டாது. அதனால் பயனர்கள் எந்தவித குழப்பமும் இன்றி தங்களது வேலைகளை தொடரலாம்.