தமிழகத்தில் மார்ச் 28ம் தேதி மின்தடை – எந்த ஏரியலா தெரியுமா? விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (மார்ச் 28) மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் மின்வாரிய ஊழியர்களால் மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளின் போது மின் பாதைக்கு இடையூறாக உள்ள வயர்கள் மற்றும் பழுதடைந்த மின் உபகரணங்கள் மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழக ஊராட்சி அலுவலகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இதன் காரணமாக அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இப்பகுதிகளின் விவரங்கள் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பி.எஸ்.கே.நகர், அழகை நகர், மலையடிப்பட்டி தெற்கு, மொட்டமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (மார்ச் 28 மின் தடை செய்யப்படவுள்ளது. அதே போல தர்மபுரி மாவட்டத்திலும் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.