தமிழகத்தில் நாளை (மார்ச் 15) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க மக்களே!
தமிழகத்தில் நாளை (மார்ச் 15) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மின் தேவையானது இன்னும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் காரணமாக மின் விநியோகம் சிறிது நேரம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மின் வாரியம் சார்பில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ள துணை மின் நிலையம் அதனால் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் பின்வருமாறு.
மல்லாங்கிணறு:
மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
விருதுநகர் உள்புறம் :
பாண்டியன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.