ரூ.69100/- ஊதியத்தில் தமிழக அஞ்சல் துறை வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Postman மற்றும் Mail Guard பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழக அஞ்சல் துறை ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Postman மற்றும் Mail Guard பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- 18 வயது பூர்த்தியான 27 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தனியார் வங்கியில் வேலை தேடுபவரா? CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
- தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21700 முதல் ரூ.69100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Limited Departmental Competitive Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.04.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.