TN MRB தமிழக சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!
சேலம் மாவட்டம் மல்லியக்கரையில் 2.64 கோடி ரூபாய் செலவில் ஆரோக்கிய நல மையத்தின் புது கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவர், பணியாளர் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பணி நியமனம்:
தமிழகத்தில் மற்ற துறைகளை தொடர்ந்து சுகாதாரத்துறையிலும் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது சேலம் மாவட்டம் மல்லியக்கரையில் தொடங்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனையில் 4,308 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லியக்கரையில், 2.64 கோடி ரூபாயில் புறநோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு, ஆரோக்கிய நல மையம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர் சேலம் மாநகராட்சியில், 32 நகர்ப்புற நலவாழ்வு மையம், ஆத்துார், மேட்டூர், இடைப்பாடி நகராட்சியில் தலா ஒரு மையம் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேட்டூரில் பச்சிளம் குழந்தை இறப்பை குறைக்க 10 லட்சம் ரூபாயில் வெண்டிலெட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் செவித்திறன் கண்டறிதல் உள்ளிட்டவைக்கு, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். காசநோய் இல்லாத தமிழகமாக மாற்ற, ஜூலை 1ம் தேதி முதல் ‘எக்ஸ்ரே’ உள்பட அனைத்து வசதிகளும் கொண்ட, 18 காசநோய் வாகன திட்டங்களை, முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். 1,021 மருத்துவர், பணியாளர் என, 4,308 பணியாளர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவர், பணியாளர் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்ந்து பேசிய முதன்மை செயலர் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தொற்று இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 3வது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு கொரோனா இல்லாத தமிழகமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். சேலம் மாநகராட்சி பகுதியில், 32 நகர்ப்புற நல வாழ்வு மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த இவர் பணிகளை பார்வையிட்டார்.