தமிழக ஆவின் பணியாளர்களுக்கு முக்கிய உத்தரவுகள் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக பால்வளத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள மனோ தங்கராஜ் அவர்கள் ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
முக்கிய உத்தரவு:
தமிழக அமைச்சரவையில் கடந்த வாரத்தில் சில அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது. அதன்படி, சம்பந்தபட்ட துறைகளை சார்ந்த புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ் அவர்கள் ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அவை பின்வருமாறு:
- தமிழக ஆவின் பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் நேரடியாக அவர்களின் வங்க கணக்குகளில் செலுத்தப்படும்.
- ஆவின் பால் பதப்படுத்துதல் பேக்கேஜிங் மற்றும் லோடிங் செய்யும் அனைத்து இடங்களிலும் நுழைவாயில்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
- பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பணியாளர்களின் வருகைகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
- ஆவின் பால் சம்பந்தப்பட்ட அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் எப்சி மற்றும் வாகனத்தின் நிலை, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
தமிழகத்தில் நாளை (மே.24) எந்த ஏரியால மின்தடை தெரியுமா? உடனே இதை பாருங்க? விவரம் இதோ!
- விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் சரியான நேரத்தில் வந்தடைவதை உறுதி செய்ய வேண்டும்.
- தனியார் பால் நிறுவனங்களில் அதிக கிளைக்கு பால் கொள்முதல் செய்வதும் அவற்றில் சர்க்கரை, யூரியா, ஸ்டார்ச் போன்ற ரசாயன பொருட்கள் கலப்படம் செய்வது போன்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- ஆவின் பால் பண்ணைகள் மற்றும் அதன் விற்பனை நிலையங்கள் அனைத்தும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download