தமிழகத்தில் ஜூலை 31க்கு மேல் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் தற்பொழுது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவானது நாளையுடன் (ஜூலை 31) முடிவடைவதால், இக்கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூலை 30) ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த மே மாதத்தில் மாநிலம் தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இடையே தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் தமிழகம் முழுவதும் தற்பொழுது கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையானது வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனிடையே கடந்த ஜூன் மாதம் முதல் நீட்டிக்கப்பட்டு வந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? – விரைவில் முதல்வர் அறிவிப்பு!
அதாவது ஜூன் மாதம் இடையில் துவங்கி ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், அத்தியாவசிய கடைகள், உணவகங்கள், சலூன்கள், பார்கள், அலுவலகங்கள், பொது போக்குவரத்து போன்ற சேவைகள் போன்றவை மீண்டுமாக அனுமதிக்கப்பட்டன. இவற்றில் தற்பொழுது திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் தவிர மற்ற அனைத்துக்குமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்ஷன் – மத்திய அரசின் அதிரடி திட்டம்!
இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவானது, நாளையுடன் முடிவடைவதால், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூலை 30) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.