விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்ஷன் – மத்திய அரசின் அதிரடி திட்டம்!
மத்திய அரசு விவசாயிகள் மற்றும் சாதாரண வேலை பார்க்கும் அனைத்து மக்களுக்கான மாதாந்திர பென்சன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு பென்சன் திட்டம் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.
பென்சன் திட்டம்:
மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் உள்ளவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பின்னர் அவர்களின் பணிக்கேற்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் ஓய்வு காலம் சிரமமின்றி இருக்கும். மேலும், அவர்களுக்கான செலவுகளையும் அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் திட்டமிட முடியும். ஆனால் விவசாயிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு அதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை 30 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அட்டவணை – முக்கிய விவரங்கள்!
அந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாகன ஓட்டுநர்கள், பிளம்பர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாந்தர பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், 60 ஆண்டு வயதை கடந்த நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ.3000 பென்சன் தொகை வழங்கப்படும். பயனாளிகள் பென்சன் பெறும் காலத்திலேயே இறந்துவிட்டால், அவரின் மனைவி/கணவனுக்கு பென்சன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் தனது வயதுக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் செலுத்த வேண்டும். 18 வயதினர் மாதம் ரூ.55 ம், 30க்கு மேல் இருந்தால் அவர்கள் மாதம் ரூ.100ம் 40 வயதினர் மதம் ரூ.200ம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு தேவைப்படும். மேலும், ஆதார் அட்டை, மொபைல் எண் ஆகிய விவரங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.