பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு – கலந்தாய்வு அறிவிப்பு!!
முதுநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வாக தலைமை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நாளை சென்னையில் நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பணிகளை தேர்தலுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக காலியாக உள்ள தலைமையாசிரியர் பணிக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலக பணிக்கு தகுதியான தலைமை ஆசிரியர்களின் விவரங்களை சரிபார்த்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆணை இடப்பட்டுள்ளது.
மார்ச் 1 முதல் 8 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
பட்டியல்:
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு நாளை சென்னையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் காலை 8:45 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது. இப்பணிக்காக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் 500 பேர் பட்டியல் தயாரிக்கட்டுள்ளது. கலந்தாய்வுக்கு தேர்வான ஆசிரியர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே கலந்தாய்வு நடக்கும் இடத்துக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் அறிவித்துள்ளார்.
மாவட்ட கல்வி அலுவலர் பணி:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியில் உள்ளவர்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு பதவி உயர்வாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 12 பேர் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்தும், 14 பேர் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நன்னடத்தைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்