மார்ச் 1 முதல் 8 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ஆலோசனை கூட்டம்:
ஜார்கண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மாநிலத்தில் ஐடிஐ பயிற்சி மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 25 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் மார்ச் 1 முதல் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் தான் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
அரசு பல்கலைக்கழகங்களை யுஜிசியின் வழிகாட்டுதல்களின் படி செயல்பட அனுமதியளித்துள்ளது. மேலும், அரசு அறிவித்துள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பள்ளி மற்றும் கல்லூரிகள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வளாகத்திற்குள் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும், கட்டாயம் நாள் முழுவதும் முகக்கவசம் அணிய வேண்டும்.
பொதுத்தேர்வுகள்:
ஜார்கண்ட் பள்ளிக்கல்வி கவுன்சில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜார்கண்ட் மாநில பொதுத்தேர்வுகள் மே 4ம் தேதி முதல் தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. 12ம் வகுப்புக்கான தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரையும், 10ம் வகுப்புக்கான தேர்வுகள் காலை 9:45 மணி முதல் 1 மணி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Really your going to re-open school ha 😁😁
In Tamilnadu only the school has not reopen please reopen the school fast educational minister