தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க குழு – அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறுபான்மையினர்:
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறுபான்மையினர் நலன்களை மேம்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது இந்த அறிவிப்பிற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் – அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு!!
Follow our Instagram for more Latest Updates
இந்த அரசாணையில், தமிழகத்தில் சிறுபான்மையினரால் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டு அவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அத்துடன் இக்கல்லூரிகளில் தொழில் முறை படிப்புகளில் 50% சிறுபான்மை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும் மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை சரிபார்க்க தலைமைச் செயலாளர் தலைவராக கொண்டு 8 உறுப்பினர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுபான்மை அந்தஸ்து அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இவை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கு பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தகைய பணிகளை மேற்கொள்ள சிறுபான்மை நல ஆணையரகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.