தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 6 வரை பணிக்கு வர விலக்கு!
தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும் ஜூன் 6ம் தேதி வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் ஆணை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றின் தீவிரத்தை குறைக்க அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. முதல்கட்டமாக மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலுக்கு வந்தது. ஊரடங்கு காலத்தில் அரசின் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஜூன் 7 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
ஊரடங்கு காலத்தில் அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதற்கு மே 31ம் தேதி வரை அரசு விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து தொற்று பாதிப்புகள் அதிகமாக வருவதால் ஜூன் 7ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவை அரசு நீட்டித்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கட்டுள்ளதால், அரசு துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதற்கான விலக்கு மேலும் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.