ஜூன் 7 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் வீதம் குறைந்து வரும் காரணத்தால் ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க உள்ளதாக துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தீவிரப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் மாநிலங்கள் தோறும் தற்போது கொரோனா பரவல் வீதம் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் தினசரி பாதிப்பானது 1 லட்சத்துக்கும் சற்று அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து? முதல்வர் முக்கிய ஆலோசனை!!
அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஜூன் 7 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து கர்நாடகா துணை முதலமைச்சர் சி.என் அஸ்வத் நாராயண் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க முடிவு செய்துள்ளோம்.
TN Job “FB Group” Join Now
அதற்கான திட்டங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை என்பதால், நிபுணர்களிடம் இருந்து கருத்துக்களை சேகரித்து வருகிறோம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் தினசரி புதிய பாதிப்புகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான பின்னர் தான் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என அரசுக்கு, TAC பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 27 முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மே 10 முதல் மே 24 வரை நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கு ஜூன் 7 வரை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.