தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வில் 4 பெண்கள் உயிரிழப்பு – ரூ.2 லட்சம் நிவாரணம்!!
வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிவாரணம் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இலவச வேட்டி மற்றும் புடவை வாங்குவதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, தைப்பூசத்தை முன்னிட்டு வாணியம்பாடி சந்தை மைதானத்தில் இலவச வேட்டி, சேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த இலவச வேட்டி, சேலைகளை வாங்குவதற்கு டோக்கன் பெறும் இடத்தில் மக்கள் கூட்டம் எக்கச்சக்கமாக அதிகரித்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பணம் எடுக்க இது கட்டாயம்! விவரங்கள் இதோ!!
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.