தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு வயது குறைப்பு?
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் அது 59 ஆக உயர்த்தப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. எப்படியேனும் அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்ற நோக்கில் பலரும் முயற்சி செய்து விடுகின்றனர். பலருக்கு அரசு வேலை வாங்குவது என்பது கனவாகவும், லட்சியமாகவும் இருந்து வருகிறது.
TNPSC போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நிபந்தனைகள் வெளியீடு!
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டால் இளைஞர்கள் வேலை பெறுவது இன்னும் கடினமாவும் கால தாமதத்தையும் ஏற்படுத்தும். இதனால் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்திய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை எழுந்தது. மேலும் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – NEET, JEE நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி!
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி அதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது. ஏனெனில் அரசின் கொள்கை முடிவுகளில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததற்கு அந்த மனுதாரருக்கு 10,000 ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்கு தொடரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.