தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – NEET, JEE நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - NEET, JEE நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - NEET, JEE நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – NEET, JEE நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாப் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு பயிற்சி:

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம் போன்ற படிப்புகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வு மட்டுமல்லாமல் பொதுத் தேர்வில் மதிப்பெண்களை உயர்த்த, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கோவை மாவட்டம் முழுவதும் 750 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC குரூப் 4 VAO 209 காலிப்பணியிடங்கள் – அக்.11 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

இந்த மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான வினாத்தாள்கள் தயார் செய்து மூன்று கட்டமாக தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெரும் முதல் 100 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சிறந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பாட நூல் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றவர்கள், நீட் பயிற்சி வகுப்பு கையாள பயிற்சி பெற்றவர்கள் மற்றும் கடின பாடங்களையும் எளிதாக கையாளும் ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வெப்மினார் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டபோது, பலரும் ஆப்லைன் வகுப்புகளுக்கே விருப்பம் தெரிவிக்கின்றனர். நெட்வொர்க் பிரச்சனையால் ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்கள், முழுமையாக மாணவர்களை சென்றடையுமா என தெரியவில்லை.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், விடுமுறை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!

இயக்குனரகத்தில் அனுமதி பெற்ற பிறகு, வகுப்புகள் துவங்கப்படும். தற்போது பொது வினாத்தாள் தயாரித்து, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் குழுவாக பிரித்து, போட்டித்தேர்வு, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பயிற்சி வழங்கப்படும். முதற்கட்ட தேர்வு வரும் 1ம் தேதி, அந்தந்த பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிலபஸ், அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!