தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும்..! அரசு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் ஓமிக்ரான் தடுப்பு பணிகளின் செயல்பாட்டை கவனிக்க மாவட்டம் தோறும் வார் ரூம்களை மக்கள் நல்வாழ்வுத் துறை மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஓமைக்ரான்:
தமிழகத்தில் கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக ஓமிக்ரன் தொற்று வேகமெடுத்து வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மீண்டும் ஒரு முழு ஊரடங்கை சந்திக்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் வந்துள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகங்கள் மீண்டும் தடுப்பு பணியாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் பொது இடங்களில் செல்வர்களுக்கு தடுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிச.26 முதல் இரவு ஊரடங்கு & கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
வெளி மாநிலங்கள் மட்டும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் மக்கள் அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், கல்வித்தகுதிகள் & முழு விபரம்!
அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் வார் ரூம்கள் கட்டமைப்பை ஏற்படுத்திட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வார் ரூம் கொரோனா தடுப்பு பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2ம் அலை தாக்கத்தின் போது கொரோனா சிகிச்சை முறை வழங்குவதில் இதன் செயல்பாடுகள் மக்களுக்கு உதவியது.