தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து விநியோகம் – உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை விநியோகித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று நடந்த இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு:
தமிழகத்தில் உள்ள ஏராளமான ஏழை, எளிய குடும்பங்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் லட்ச கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்க முடியாது என்ற காரணத்தால் அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருத்து பொருட்களை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி காலாவதியான மருந்து பொருட்களை விநியோகித்தது மற்றும் தற்போது தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் நோய்கள் குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான மனிதவள சீரமைப்புக் குழு அமைப்பு – வலுக்கும் எதிர்ப்புகள்.. அரசு விளக்கம்!
Exams Daily Mobile App Download
அப்போது தமிழக அரசு பரவி வரும் வைரஸ் நோய்கள் குறித்த காரணத்தை அறிக்கையாக சமர்ப்பித்தது. அதனை தொடர்ந்து நீதிமன்றம் தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைத்து அவ்வப்போது சோதனை நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.