தங்க நகை வாங்க போறீங்களா – அப்போ விலையை தெரிஞ்சுக்கோங்க… இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் தொடர்ந்து ஏற்றம் அடைந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 சரிந்துள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கம் மற்றும் அதனால் ஆன அணிகலன்கள் பயன்பாடு எப்போதும் அதிகமாகவே இருக்கும். மேலை நாடுகளில் தங்கம் என்பது ஒரு விதமான முதலீடு ஆனால் இந்தியாவில் தங்க அணிகலன்கள் ஒரு வகையான கலாச்சாரமாக இருந்து வருகிறது. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தங்க நகைகள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காண்பிப்பர்.
TNPSCயின் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – முழு விவரம் இதோ!
இத்தகைய நேரத்தில் கடந்த 2 வருடங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் அடைந்து வருகிறது. தினந்தோறும் பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்தே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வார இறுதி நாளில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் 43,320க்கு விற்பனையாகி வந்தது. இந்த விலை உயர்வால் அதிருப்தி அடைந்த மக்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று மகிழ்ச்சியளிக்கும் விதமாக (பிப்.20) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 42,240 க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் தங்கம் கிராமுக்கு ரூ. 10 சரிந்து ரூ. 5,280 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.71.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.