ரயில்வே குரூப் ‘B’ கணினி வழித்தேர்வு – எழுத தவறியவர்களுக்கு மாற்று தேதி அறிவிப்பு!
ரயில்வே துறையில் காலியாக இருந்த 929 குரூப் ‘B’ பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு நேற்று ரயில்வே வாரியத்தால் நடைபெற்றது. இத்தேர்வை எழுத தவறியவர்களுக்கு தேர்வு நாள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் ‘B’ பணியிடம்
ரயில்வேயில் குரூப் ‘B’ பதவி உயர்வுக்கான தேர்வில் கடந்த ஆண்டு ரயில்வே வாரியத்தால் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி குரூப் ‘B’ பதவிக்கான காலியிடங்களில் 70% கணினி அடிப்படையிலான தேர்வு மூலமாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 30% Limited Departmental Competitive Examinations தேர்வு மூலமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது
தங்க நகை வாங்க போறீங்களா – அப்போ விலையை தெரிஞ்சுக்கோங்க… இன்றைய நிலவரம் இதோ!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இந்த ஆண்டுக்கான ரயில்வே துறையில் குரூப் ‘B’ பதவி உயர்வுக்கான கணினி வழித்தேர்வு நேற்று நடத்தப்பட்டது என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இத்தேர்வு மூலமாக 929 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் சுமார் 6,031 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.
இத்தேர்வை தகுதியுள்ள காரணங்களுக்காக எழுத தவறியவர்களுக்கு வருகிற மார்ச் 5ம் தேதி அன்று தேர்வு நடத்த உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.