தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – உணவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பை 2.82 லட்சம் பேர் பெறவில்லை என்று உணவுத் துறை வட்டாரங்களிடம் இருந்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்:
2022 ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பாகிய வெல்லம், ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி , திராட்சை , ஏலக்காய் , பாசிப்பருப்பு , நெய் , மஞ்சள் தூள் , மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு , ரவை, கோதுமை மாவு , உப்பு, முழு கரும்பு, துணி பை ஒன்று ஆகிய 21 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இப்பரிசு பொருட்கள் ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது இப்பரிசு தொகுப்பு விநியோகம் ஜனவரி 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டதாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6 (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில முதல்வர் அறிவிப்பு!
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று பரவலால் ரேஷன் கடைகளில் கூட்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரு நாளைக்கு 150 முதல் 200 நபர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு ஜனவரி 31 தேதியுடன் முடிவடைந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் 88 சதவீதம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.
2 மணிநேரம் தளர்வுகளுடன் மீண்டும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது பரிசுத் தொகுப்பைப் பெற தகுதியான 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களில் 2.12 கோடி (98.38%) மக்கள் மட்டும் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது . இதில் மீதம் உள்ள 2.82 லட்சம் பேர் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை என்று உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் பல்வேறு காரணங்களால் தொகுப்பை வாங்க இயலாதவர்கள்களுக்கு அதனை மீண்டும் பெற அவகாசம் அளிக்கப்பட்டிருந்த போதிலும் 2.82 லட்சம் பேர் வாங்காதது சர்சையை ஏற்படுத்தி உள்ளது .