தமிழக அரசு மீன்வளத் துறையில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது! டிச.1 நேர்காணல்!
தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிச.1ம் தேதி நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
ரூ.30,000 ஊதியத்தில் வேலை:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள எடிட்டர் பதவிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரந்தர பணியிடமாக நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் புதன்கிழமை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த பதவிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வயது வரம்பாக அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கான கல்வித்தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் BA/ B.Sc/ M.F.Sc/ B.F.Sc ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியோடு எடிட்டிங் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரியில் 3% கூடுதல் DA உயர்வு – 7வது ஊதியக் குழு தகவல்!
இந்த பதவிக்கு நடத்தப்படும் நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு சம்பளம் அதிகபட்சமாக மாதம் ரூ.30,000 வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 1ம் தேதி Dr. MGR Fisheries College and Research Institute, NGO Nagar Extension, Ponneri, Tamil Nadu 601204 என்ற முகவரிக்கு சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.